நாட்டு துப்பாக்கியுடன் வனப்பகுதியில் ஒருவர் கைது
நெல்லை வன உயிரின சரணாலயம் வன உயிர் காப்பாளர் முருகன் உத்தரவின்படி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் கடையநல்லூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான சொக்கம்பட்டி சேம்புத்து பகுதியில் இரவு ரோந்து பணி செல்லும்பொழுது வன உயிரினங்களை வேட்டையாடுவதற்கு கையில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் நெற்றி விளக்குடன் நவாஸ் கான் என்பவர் வனப்பகுதியில் வளம் வந்ததைத்தொடர்ந்து அவரை அதிகாலையில் கைது வனத்துறை அதிகாரிகளால் செய்யப்பட்டார். மேலும் இவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இவருக்கு நாட்டு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்தும், இந்த வழக்கில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :