தேவூரில் சட்டவிரோதமாக மது விற்ற நபர் கைது

by Staff / 03-10-2022 12:10:06pm
தேவூரில் சட்டவிரோதமாக மது விற்ற நபர் கைது

காந்தி ஜெயந்தி விழாவையொட்டி அரசு மதுபான கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளிக்கப்பட்டயிருந்த நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள காவேரிப்பட்டி பிரிவு சாலை தேவூரில் அரசு மதுபானங்களை அரசு அனுமதி இன்றி சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக தேவூர் காவல்துறையினருக்கும் கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில் அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் அரசு மது பானங்கள் விற்பனை செய்தது தெரியவந்தது உடனடியாக காவல் நிலையம் அழைத்து வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டல்களையும் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via