உக்ரேன் தலைநகரில் 410 பொது மக்களின் உடல்கள் கண்டெடுப்பு

by Staff / 04-04-2022 11:48:37am
உக்ரேன் தலைநகரில் 410 பொது மக்களின் உடல்கள் கண்டெடுப்பு

உக்ரைன் நாட்டு தலைநகரில் பொதுமக்கள் 410 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன ரஷ்ய போர் குற்றத்தில்   ஈடுபடுவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு  தொடங்கியதிலிருந்து 42 லட்சம் பேர்உக்ரேனை  விட்டு வெளியேறி உள்ளதாகவும் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் போரில் கொல்லப்பட்டு இருக்கலாம் எனவும் ஐநா அகதிகள் அமைப்பு கூறியுள்ளது.

கிவ்  கார்கிவ் மற்றும் சேர்னிகிவ் ஆகிய நகரங்களில் ரஷ்ய படையினர் பாலியல் வன்முறை கொலை உள்ளிட்ட பொது மக்களுக்கு எதிரான போர் குற்றங்களை செய்திருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

Tags :

Share via