தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு

by Editor / 05-04-2022 08:17:50am
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இரண்டு அலகுகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலையத்தில் 5 அலகுகள் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது இந்த நிலையில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக நேற்று 3 மற்றும் 4 ஆகிய அலகுகளில் மின் உற்பத்தில்  திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. 1.2.5 ஆகிய  3 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இரண்டு அளவுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via