பாலியல் தொல்லை.மாணவர்கள் போராட்டம் அரசு கல்லூரி மூடல்

by Editor / 08-04-2022 02:03:38pm
பாலியல் தொல்லை.மாணவர்கள் போராட்டம் அரசு கல்லூரி மூடல்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு கல்லூரியில் 4,745 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியின் உதவி பேராசிரியர்  மகேந்திரன்(59). மாணவியை தனது வீட்டிற்கு வா என செல்போனில் அழைக்கும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் பாலியல் தொல்லை உண்மை என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் சேகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதனை தொடர்ந்து போலீசாருடன் கல்லூரிக்கு வந்து விசாரணைக்காக உதவி பேராசிரியரை காவல் நிலையம் அழைத்து சென்றார். அப்போது, அங்கு கூடியிருந்த கல்லூரி மாணவர்கள் உதவி பேராசிரியருக்கு, எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
காவல் நிலையத்தில் 4 மணி நேரம் விசாரணை நடந்தது. இதன்பின் அவர் மீது 5 வழக்குகள் பதிந்து கைது செய்தனர். பின்னர் பொன்னேரி நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் போலீசார் அவரை  புழல் சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்.மறுஅறிவிப்பு வரும்வரை வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு.

 

Tags :

Share via