இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு 1.13 கோடி ரூபாய் நிவாரணம்

by Editor / 09-04-2022 03:53:40pm
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு 1.13 கோடி ரூபாய் நிவாரணம்

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டு  தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளுக்கு நிவாரண உதவி.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய், நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா 1.5 லட்சம் வீதம் 24 படகு உரிமையாளர்களுக்கு 1.13 கோடி ரூபாய் நிவாரண உதவியை வழங்கினார்.இந்த நிகழ்வில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

 

Tags :

Share via