சிலி காட்டுத்தீ - 99 பேர் பலி
சிலி நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99ஆக அதிகரித்துள்ளது. தெற்கு, மத்திய சிலி பகுதிகளில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அடா்த்தி மிகுந்த நாட்டின் மத்திய பகுதியில் தீ ஏற்பட்டதே உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தீ விபத்தில் இதுவரை 64,000 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது; சுமார் 1000 வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. மக்களை மீட்கும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.
Tags :