அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பில்லை - அண்ணாமலை

by Staff / 03-11-2023 03:56:56pm
அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பில்லை - அண்ணாமலை

தமிழகத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். காளையார் கோவிலில் மணற்கொள்ளையை தடுக்க சென்ற VAO தாக்கப்பட்ட சம்பவம் மற்றும் வேலூரில் மணற்கொள்ளையை வீடியோ எடுத்த ராணுவ வீரர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கிறதா, இல்லை சமூக விரோதிகளுக்காக ஆட்சி நடக்கிறதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via