ஜீப்பை விரட்டிய யானை அலறிய பயணிகள்

by Editor / 01-11-2022 10:47:26am
ஜீப்பை விரட்டிய யானை அலறிய பயணிகள்

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தென்மலை பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட நெடுமங்காடு என்னும்  பகுதியிலிருந்து மாம்பழந்துறை பகுதிக்கு ரப்பர் தோட்ட வேலைகளுக்காக நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் செல்வது வழக்கம்.

மேலும், ஒரு சிலர் அந்தப் பகுதியிலே குடியிருந்து ரப்பர் தோட்ட தொழில் செய்து வரும் சூழலில், நாள்தோறும் நெடுமங்காடு பகுதியில் இருந்து மாம்பழந்துறை பகுதிக்கு ஏராளமான பொதுமக்கள் ஜீப்பில் பயணம் செய்வது வழக்கம்.

 அந்த வகையில், நேற்று  ஜீப்பில் நெடுமங்காடு பகுதியில் இருந்து மாம்பழம் துறைக்கு சில இளைஞர்கள் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது, செல்லும் சாலையில் ஓரமாக உள்ள ரப்பர் தோட்ட பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது.

 அதை பார்த்த, அந்த இளைஞர்கள் கூச்சலிடவே, கோபம் அடைந்த அந்த ஓற்றை காட்டு யானை ஜூப்பில் பயணம் செய்தவர்களை விரட்டியுள்ளது.

 உடனே, அந்த இளைஞர்கள் ஜீப்பை வேகமாக எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

 மேலும், அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் யாரும் வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட வேண்டாம் எனவும் வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via