4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

by Staff / 01-11-2022 12:03:01pm
 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் கடந்த 29ம் தேதி பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்கிறது. தொடர் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோன்று தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர்.

 

Tags :

Share via