மொட்டை மாடியில் திடீர் தீ விபத்து

by Staff / 18-01-2023 01:02:59pm
 மொட்டை மாடியில் திடீர் தீ விபத்து

புகலூர் அருகே உள்ள கந்தம்பாளையம் பகுதியில் வசித்து வரும் வடிவேல் என்பவரது வீட்டு மாடியில் அருகில் நேற்று திடீரென புகைமூட்டம் காணப்பட்டது.இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர் வேலாயுதம்பாளையம் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து மொட்டை மாடியில் பற்றிய தீயை கட்டுப்படுத்தினர்.இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.விபத்துக்கான காரணம் குறித்து கரூர் வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via