படகிலிருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவன் பலி

by Staff / 18-01-2023 01:26:05pm
படகிலிருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவன் பலி

தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்த வாலிபர் ஜெனிஷ்டோ சென்னையில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்
விடுமுறைக்கு தூத்துக்குடிக்கு வந்த, ஜெனிஷ்டோ தனது நண்பர்கள் 10 பேருடன் நேற்று இரவு சிறிய படகு மூலம் அனல் மின் நிலையம் அருகே உள்ள உப்பாற்று ஓடையில் உற்சாகமாக இருக்க சென்றுள்ளனர்

இதில் சிறிய படகில் வைத்து நடனம் ஆடியுள்ளனர் இதில் படகு தலைகிழாக கவிழ படகில் இருந்த வாலிபர் ஜெனிஷ்டோ உள்ளிட்ட 10 பேர் உப்பாற்று ஓடையில் தவறி விழுந்துள்ளனர் இதில் ஒன்பது பேர் ஓடையில் இருந்து தப்பி வெளியே வந்துள்ளனர் ஆனால் உப்பாற்று ஓடையில் ஆழத்தில் சிக்கிய ஜெனிஷ்டோ மட்டும் வெளியே வரவில்லை

இதைத்தொடர்ந்து ஜெனிஷ்டோவின் நண்பர்கள் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர் இதை அடுத்து தெர்மல் நகர் காவல் துறையினர் இன்று அதிகாலை சுமார் இரண்டு மணி நேரம் உப்பாற்று ஓடை பகுதியில் சிறிய படகில் மீனவர்களுடன் சென்று வாலிபர் உடலை தேடி வந்தனர்.

இதை தொடர்ந்து முட்புதரில் சிக்கி இருந்த ஜெனிஷ்டோவின் உடலை மீட்ட காவல்துறையினர் கல்லூரி மாணவர் ஜெனிஷ்டோவின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via