கடந்த 3 மாதங்களில் முதல் முறையாக கொரோனா பரவல் விகிதம் அதிகரித்துள்ளது.

by Staff / 21-04-2022 01:46:53pm
கடந்த 3 மாதங்களில் முதல் முறையாக கொரோனா பரவல் விகிதம் அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளான ஒருவர், மற்றவர்களுக்கு தொற்றை பரப்புகிற விகிதம் ‘ஆர் வேல்யூ’ என்று அழைக்கப்படுகிறது.தற்போது, அது 3 மாதங்களில் முதல்முறையாக 1-க்கு மேல் அதிகரித்துள்ளது. கடந்த 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரையிலான வாரத்தில், இது 1.07 ஆக அதிகரித்துள்ளது. அதாவது தொற்று பாதித்த ஒருவர் 1.07 பேருக்கு தொற்றை பரப்புகிறார்.
கடந்த 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரையிலான வாரத்தில் இது 0.93 சதவீதமாக இருந்தது. கடந்த முறை இந்த தொற்று பரப்பு விகிதம் 1-க்கு அதிகமாக இருந்தது, ஜனவரி 16-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரையிலான வாரத்தில் (1.28) தான்.இந்த ஏற்றத்துக்கு காரணம், டெல்லியில் கொரோனா அதிகரித்தது மட்டுமல்ல, அரியானா, உத்தரபிரதேசத்திலும் அதிகரித்ததுதான் என்று நிபுணர்கள் கூறி உள்ளனர்.இந்த தொற்று பரவல் விகிதம் அதிகரிப்பது, சிகிச்சை பெறுகிற நோயாளியின் எண்ணிக்கை அதிகரிப்பதை காட்டுகிறது. தொற்றைக்கட்டுப்படுத்த இது 1-ஐ விட குறைவாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.1-ஐ விட குறைவாக ஆகிறபோது, தொற்று வெடிப்பை தக்க வைக்க போதுமான மனிதர்கள் இல்லை என்பதால், நோய் பரவல் நின்று விடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

Tags :

Share via