அரவிந்தர் 150-வது ஆண்டு விழாவை தொடக்கி வைத்தார் அமித் ஷா

by Staff / 24-04-2022 04:49:25pm
அரவிந்தர் 150-வது ஆண்டு விழாவை தொடக்கி வைத்தார் அமித் ஷா

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறை 150 ஆண்டு விழாவை தொடக்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 48 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.  அரசு முறை பயணமாக வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமான நிலையத்தில் துணை நிலை ஆளுநர் தமிழிசை முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வரவேற்றனர். புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பாரதியார் வாழ்ந்த இல்லத்துக்குச் சென்று அங்கு பாரதியாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தர் அன்னை ஆகியோரின் சமாதிகளிலும்  மலர்தூவி மரியாதை செலுத்தினர். அமிர்தா புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அரவிந்த 150-வது ஆண்டு விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த தொடங்கி வைத்தார். அங்கு 48 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய  அமித் ஷா நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட புரட்சியாளர் அரவிந்தர் என தெரிவித்தார். புதுச்சேரிக்கு வந்த பின் அரவிந்தர் ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்ததாகவும் குறிப்பிட்டார்.

 

Tags :

Share via