பட்டாசு ஆலை விபத்து - பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

by Staff / 06-02-2024 05:31:22pm
பட்டாசு ஆலை விபத்து - பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

மத்தியப் பிரதேசம், ஹர்தா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. 11 பேர் பலியான நிலையில், 60 பேர் காயமடைந்தனர். 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via