திரிபோலி நகரத்தை ஒட்டிய கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து
லெபனானில் திரிபோலி நகரத்தை ஒட்டியுள்ள கடல் பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உயிரிழந்தது 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. லெபனானில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் இருந்து லெபனானியர்கள் மற்றும் சிரிய அகதிகள் 60 பேர் திரிபோலி தெற்கே உள்ள பகுதியில் இருந்து படகில் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி பயணித்துக் கொண்டே இருந்துள்ளனர். அந்த படகை விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மீட்கப்பட்டவர்கள் அனைவரும் நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Tags :