சென்னையில் தடம் புரண்ட மின்சார ரயில்

by Admin / 24-04-2022 10:17:30pm
சென்னையில் தடம் புரண்ட மின்சார ரயில்


சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பணிமனையிலிருந்து வந்த மின்சார ரயில் ஒன்றாவது நடைமேடை கடைமீது மோதி விபத்துக்குள்ளானது.பயணிகள் இல்லாததாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் நடை மேடையில் பயணியர்கள் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை.டிரைவர் வெளியே குதித்ததால் சிறிது காயங்களுடன் தப்பினார்.விபத்து குறித்து அறிந்ததும் ரயில்வே காவல்துறை துணைகண்காணிப்பாளர்,ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினர் ரயில் விபத்து குறித்து ஆய்வை மேற்கொண்டும் ,,தீயணைப்பு துறையினர்,மீட்புக்குழுவினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via