மாணவியிடம் பாலியல் வன்கொடுமை-

by Staff / 04-05-2022 04:46:18pm
மாணவியிடம் பாலியல் வன்கொடுமை-

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேலூர் அருகே உள்ள கோடஞ்சேரியைச் சேர்ந்தவர் பாபு (வயது 55).
 
இவர் வேலூர் சலப்பிரம் சாலையில் கடந்த ஒரு மாதமாக டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு வந்த மாணவி ஒருவருக்கு, பாபு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் பாபுவின் பாலியல் வன்கொடுமை தொடர்பாக போலீசில் புகார் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆசிரியர் பாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில் பாபுவின் டியூசன் சென்டரை மர்மநபர்கள் சிலர் சேதப்படுத்தி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via