நிலச்சரிவு- 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தம்

by Staff / 04-05-2022 05:30:45pm
 நிலச்சரிவு- 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தம்

நிலச்சரிவு காரணமாக ஜம்மு காஷ்மீரில் உள்ள ரம்பான் மாவட்டத்தில் அமைந்துள்ள எஃகு சுரங்கப்பாதை பலத்த சேதமடைந்துள்ளது. 

இதையடுத்து ஜம்மூ -ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக  மூடப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பாதிப்பை சரி செய்து, நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணியில் எல்லை சாலைகள் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.சாலை சீரமைப்பிற்கு பிறகு வாகனங்கள் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via