கத்தரி வெயிலுக்கு மயங்கி விழுந்து முதியவர் உயிரிழப்பு

by Editor / 05-05-2022 04:29:30pm
 கத்தரி வெயிலுக்கு  மயங்கி விழுந்து முதியவர் உயிரிழப்பு

சிவகங்கை அருகே உள்ள ஊத்திகுலத்தை சேர்ந்தவர் பாண்டி (70). விவசாயத் தொழிலை மேற்கொண்டு வரும் இவர் இரு சக்கர வாகனத்தில் சிவகங்கை நேரு பஜார் பள்ளிவாசல் அருகே காய்கறி வாங்க,
இறங்கினார். சிறிது நேரத்தில் கோடை வெயில் தாக்கத்தால் மயங்கி விழுந்தார். அருகில் உள்ளவர்கள் போலிஸ் மற்றும் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவம் இடம் வந்த மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்ததில் முதியவர் பாண்டி உயிரிழந்ததாக தெரிவித்தனர். நீண்ட நேரம் ஆகியும் காவல்துறையினர் வராத நிலையில், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பாண்டியின் உடலை அவரது சொந்த ஊருக்கு ஜமாத்தார்கள் அனுப்பி வைத்தனர்.  ஊத்திகுளத்தை சேர்ந்த விவசாயி பாண்டி (70) வெய்யில் காரணமாக மயங்கி  விழுந்து உயிரிழந்த சம்பவம் அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்கியது.

 

Tags :

Share via