சென்னையில் ஆட்டோவில் அமர்ந்து கஞ்சா புகைத்தை உரிமையாளர் தட்டிக் கேட்டதால் ஆத்திரத்தில் ஆட்டோவில் தீயிட்டுக் கொளுத்திய மூவர்

by Staff / 05-05-2022 04:58:19pm
சென்னையில் ஆட்டோவில் அமர்ந்து கஞ்சா புகைத்தை  உரிமையாளர் தட்டிக் கேட்டதால் ஆத்திரத்தில் ஆட்டோவில் தீயிட்டுக் கொளுத்திய மூவர்

சென்னையில் ஆட்டோவில் அமர்ந்து கஞ்சா போதை போதை உரிமையாளர் தட்டிக் கேட்டதால் ஆத்திரத்தில் அந்த ஆட்டோவை தீயிட்டுக் கொளுத்திய மூவர் கைது செய்யப்பட்டனர். திருவல்லிக்கேணி நீலம் பாஷா தெருவில் அப்பாஸ் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் அமர்ந்து நள்ளிரவில் அதே பகுதியை சேர்ந்த அப்துல் உசேன் பாஷா ஆகியோர் கஞ்சா புகை கூறப்படுகிறது. ஆட்டோ அப்பாஸின் வீட்டு அருகே நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இதனை பார்த்து அவரது மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவரை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்ற மூவரும். மீண்டும் அதிகாலை நேரத்தில் பெட்ரோல் எடுத்து வந்து ஆட்டோ மீது ஊற்றி தீயிட்டு கொளுத்தி உள்ளனர்.

 

Tags :

Share via