நியாயத்திற்கு மட்டுமே பல்லாக்கு தூக்க வேண்டும் அமைச்சர் சேகர்பாபு

by Staff / 06-05-2022 02:22:02pm
நியாயத்திற்கு மட்டுமே பல்லாக்கு தூக்க வேண்டும் அமைச்சர் சேகர்பாபு

தருமபுர ஆதீனம் பட்டினப்பிரவேசம் பல்லக்கு தூக்கும் நிகழ்வு தொடர்பாக அனைத்து மனம் குளிரும் வகையில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலை துறை அலுவலகத்தில் மண்டல அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டார் பிறகு தருமபுரி ஆதித்தனும் நானே பல்லாக்கு தூக்குவேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர். யாருக்கும் பல்லாக்கு தூக்க கூடாது நியாயத்திற்கு மட்டுமே பல்லாக்கு தூக்க வேண்டும் என்றார்.

 

Tags :

Share via