சென்னையில் விசாரணைக் கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் 2 போலீசார் கைது

by Staff / 07-05-2022 01:19:59pm
சென்னையில் விசாரணைக் கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் 2 போலீசார் கைது

சென்னையில் விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக 2 போலீசார் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தலைமைச் செயலக காலனி காவல் நிலையம் போலீசாரின் விசாரணைக்கு சென்ற விக்னேஷ் கடந்த 19ம் தேதியும் மரணமடைந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிபிசிஐடி அனுப்பிய சம்மனை அடிப்படையில் வழக்கில் தொடர்புடைய போலீசார் 9 பேர் நேற்று காலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு விசாரணையின்  போது பெண் காவலர் ஆனந்தி விக்னேஷ் தாக்கப்பட்டது குறித்து மருத்துவமனைக்கு அவர் எந்த நிலையில் கொண்டு செல்லப்பட்டார் என்பது குறித்து வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கு தொடர்பாக தலைமைச் செயலக காலனி காவல் நிலைய எழுத்தாளர் முனாப் பவுன்ராஜ்  ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via