காரில் வந்தவரின் கவனத்தை திசை திருப்பி 6.9 லட்சம் கொள்ளை கர்நாடகாவைச் சேர்ந்த 4 பேர் கைது

by Staff / 08-05-2022 03:39:26pm
காரில் வந்தவரின் கவனத்தை திசை திருப்பி 6.9 லட்சம் கொள்ளை கர்நாடகாவைச் சேர்ந்த 4 பேர்  கைது


மேட்டுப்பாளையம் அருகே காரில் வந்தவரின் கவனத்தை திசை திருப்பி காரில் இருந்த 6 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையைச் சேர்ந்த எட்வின் ஜோசப் என்பவரின் காரில் சென்ற போது இளைஞர் ஒருவர் வழிமறித்து அவரது கார் பஞ்சர் ஆகி விட்டதாக கூறி கவனத்தை திசை திருப்பியுள்ளார். அப்போது கூட்டாளிகள் 3 பேர் காரில் இருந்த பணத்தை எடுத்து தப்பிச் சென்றுள்ளனர். கடந்த வாரம் நடந்த இச்சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் ஓசூரில் கர்நாடகாவைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். அவர்கள் கொள்ளையடித்த 14 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags :

Share via