நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மேலும் நீட்டிப்பு

by Staff / 16-05-2022 02:27:08pm
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மேலும் நீட்டிப்பு


நீட் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் வருகிற 20-ஆம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் 20 தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது இதுவரை 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்வு முகமை தெரிவித்துள்ளது.  மருத்துவ  படிப்பிற்கு இந்தியா முழுவதுமுள்ள +2மாணவர் இத்தேர்வினை எழுதுவதின் மூலம் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பில்சேர விண்ணப்பிக்க முடியும் . அதற்கு முன் அந்தந்த மாநிலங்களில் +2தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களின்  படி மாணவர் சேர்க்கை நடைப்பெற்றது மே20 வரை  விண்ணப்பிக்கலாம்.

 

Tags :

Share via