அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிலமோசடி லாலுபிரசாத் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி வேலையில்லா இளைஞர்களிடம் நில மோசடி செய்த குற்றச்சாட்டில் லாலு பிரசாத் யாதவ் அவர்கள் மகள் மிசா பாரதி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து உள்ள சிபிஐ அதிகாரிகள் டெல்லி பீகாரில் 17 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். 2004 2009 காலகட்டத்தில் லாலுபிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது இளைஞர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறிய அவர்களிடமிருந்து நிலங்களைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இது குறித்து லாலு பிரசாத் மகள் ஆகியோர் மீது லஞ்ச ஊழல் வழக்கை சிபிஐ அதிகாரி பதிந்துள்ளனர். இதையடுத்து டெல்லி பாட்னா உள்ளிட்ட 17 இடங்களில் லாலு பிரசாத்துக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்ற ஒரு வாரத்தில் இந்த சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Tags :