கனமழையால் வடகிழக்கு மாநிலங்களில் 29 பேர் உயிரிழப்பு

by Staff / 22-05-2022 01:18:05pm
கனமழையால் வடகிழக்கு மாநிலங்களில் 29 பேர் உயிரிழப்பு

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டிய கனமழை நாளுக்குநாள் உச்சகட்டத்தை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் 4 பேர் உயிரிழந்த நிலையில் கடந்த 9 நாட்களில் 29 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அருணாச்சலப் பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவுகளும் சாலைகள் ரயில் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன அதிகளவில் பாதிப்புக்கு உள்ளான அசாமில் நேற்று பாதிப்பு சற்று குறைந்தது ஆயிரக்கணக்கான முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் உணவு மருந்துகள் உள்ளிட்ட விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அனுப்பப்படுகிறது  ராஜஸ்தானில் புழுதிப்புயல் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 

Tags :

Share via