55 குவாரிகளை ஆய்வு செய்ய 6 சிறப்பு குழுக்கள் போர்க்கால அடிப்படையில் ஆய்வு

by Editor / 23-05-2022 04:04:08pm
55 குவாரிகளை ஆய்வு செய்ய 6 சிறப்பு குழுக்கள் போர்க்கால அடிப்படையில் ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளை ஆய்வு செய்ய 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்புகுழுவில் பிறமாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகளும் இடம் பெறுவர்.குழு தலைவராக மாவட்ட வருவாய் அலுவலர் இடம்பெறுவர்.  துணை ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை கனிம வளத்துறைஅதிகாரிகள், காவல்துறையினரும் இந்த குழுவில் இடம்பெறுவார்கள்.குழு அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும்.போர்க்கால அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்படும் -என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

 

Tags : 6 special teams to inspect 55 quarries on wartime basis

Share via