குழந்தைகளுடன் தாய் மரணம்

by Staff / 23-05-2022 04:21:28pm
 குழந்தைகளுடன் தாய் மரணம்

திருவாரூரைச் சேர்ந்த முத்துமாரி என்பவர், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பூர் வாவிபாளையம் அடுத்த பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அங்கு அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை நெடுநேரம் ஆகியும் வீட்டில் இருந்து குழந்தைகளோ முத்துமாரியோ வெளியே வராததை அடுத்து அக்கம்பக்கத்தினர் வீட்டை உடைத்துச் சென்று பார்த்தபோது, முத்துமாரி கத்தி குத்து காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
 
மேலும் அவரது இரண்டு குழந்தைகளும் இறந்து கிடந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர், காவல்துறைக்கு புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்ட காவலர்கள், உடல்பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தநிலையில் முத்துமாரியின் கணவர் காணாமல் போனது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. 


 
 

 

Tags :

Share via