பணத்திற்காக 4 பேரை திருமணம் செய்த பெண்
பணத்திற்காக 4 பேரை திருமணம் செய்த இளம் பெண்ணை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு ஆண்டுக்கு முன் பிரசாந்த் என்பவருடன் திருமணம் ஆன நிலையில் தான் கருவுற்றிருப்பதாக கூறிவிட்டு அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார் அந்த பெண். திரும்ப வராததால், பிரசாந்த் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் அவருக்கு ஏற்கெனவே இரண்டு திருமணம் நடந்ததும், தற்போது ரகு என்பவரை நான்காவதாக திருமணம் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. போலீசார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags :