தீவிர அரசியலில் களமிறங்குகிறாரா பிரியங்கா காந்தியின் கணவர்..
பிரியங்கா காந்தியின் கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு அரசியலுக்கு வரப்போவதாக மீண்டும் ஒருமுறை சூசகமாகத் தெரிவித்துள்ளார். தன்னை போட்டியிட வைக்க மக்கள் வற்புறுத்துவதாகவும், அமேதி தொகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் அழைப்பு விடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.இது குறித்து பேட்டியளித்துள்ள அவர், அமேதியில் மட்டுமல்லாது, தீவிரமாக அரசியலில் ஈடுபட நாடு முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்களின் ஆதரவை நான் பெறுகிறேன். ஏனெனில், 1999ஆம் ஆண்டு முதல் அமேதியில் பிரச்சாரம் செய்து வருகிறேன். நான் அமேதியில் போட்டியிட்டால், கடந்த தேர்தலில் ஸ்மிருதி இரானியை தேர்வு செய்த தவறை அத்தொகுதி மக்கள் திருத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்றார்.
Tags :