சென்னையில் தீ விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு

by Staff / 22-03-2024 12:48:10pm
சென்னையில் தீ விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு

சென்னையில் பள்ளி படிப்புக்காக வீட்டில் ஆராய்ச்சி செய்த போது ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்தார். கொளத்தூர் குமரன் நகரில் 12-ம் வகுப்பு மாணவர் ஆதித்யா பிரணவ் ரசாயனம் வைத்து ஆராய்ச்சி செய்துள்ளார். ரசாயனம் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்தார். மாணவரின் வீட்டில் ரசாயனம் வெடித்து தீப்பற்றியதில் அடுத்தடுத்து உள்ள வீடுகளின் சுவர்களும் இடிந்தன.

 

Tags :

Share via