தந்தை இறந்த நிலையிலும் +2 தேர்வில் கலந்து கொண்ட மாணவி.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காளியம்மன் கோயில் தெருவைசேர்ந்தவர் சுமை தூக்கும் தொழிலாளி முத்துப்பாண்டி இவர் நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.இந்தநிலையில் இவரது மகள் முத்துமாரி கமுதி நாடார் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்,இந்த நிலையில் +2 மாணவி முத்துமாரியின் தந்தையின் இறுதிச் சடங்கை இன்று நடத்தப்பட உறவினர்கள் திட்டமிட்டிருந்தனர்.இதையடுத்து +2 மாணவி முத்துமாரிக்கு வரலாறு தேர்வு இன்று நடைபெற்றதை அடுத்து தந்தை உயிரிழந்த நிலையில் அவரது உடல் இறுதி மரியாதைக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மாணவி முத்துமாரி சோகத்துடன் பள்ளிக்கு சென்று தனது தேர்வை மிகுந்த மன தைரியத்துடன் எழுதி யாவர் தேர்வு முடிந்தவுடன் தனது உறவினருடன் இருசக்கரவாகனத்தில் வீட்டுக்கு வந்து தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொண்டார்.
Tags : The student who took the +2 exam even after the death of his father.