இருதரப்பினரிடையே மோதல்

by Staff / 25-05-2022 04:52:23pm
இருதரப்பினரிடையே மோதல்

நெல்லையில் நிலம் தொடர்பான பிரச்சனையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது வழக்கறிஞர் உள்ளிட்ட எதிர்தரப்பு சார்ந்த வரை பெற்ற முயன்றதால் இரு தரப்பை சேர்ந்த இருவர் மீது வழக்கு.

நெல்லை டவுன் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் சங்கர் இரு தரப்புக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலப்பிரச்சினை இருந்து வருகின்றது நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் அந்த இடத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சங்கர் மற்றும் அவரது சகோதரி சண்முக சுந்தரி ஆகியோர் அந்த நிலத்தில் கட்டிடம் கட்டி வந்துள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த உமாமகேஸ்வரி மகன் விக்னேஷ் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது கட்டிடம் கட்டக்கூடாது என்று கூறி வீட்டின் உள்கட்டுமானங்களை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்து ஆவேசமடைந்த சங்கரின் வழக்கறிஞர் மண்வெட்டி கொண்டு விக்னேஷ் ஓங்கி வெட்டுவதற்கு பாய்ந்துள்ளார் தாக்குதலில் இருந்து விலகிய விக்னேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கியுள்ளார் பின்னர் அங்கிருந்து விக்னேஷ் தரப்பு வழக்கறிஞர் அவரை சமாதானப்படுத்தி சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கறிஞர் நவ்ஷாத் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் மேலும் சங்கர் அளித்த புகாரின் பேரில் விக்னேஷ் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது நிலம் தொடர்பாக இரண்டு தலைப்புகளில் மோதியதில் வழக்கறிஞர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 

Tags :

Share via