ஒப்பந்ததாரரிடம் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

by Staff / 26-05-2022 03:24:13pm
ஒப்பந்ததாரரிடம் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது


 திருவையாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது செய்யப்பட்டார். ஊராட்சி ஒன்றியம் ஒப்பந்ததாரர் சரவணன் கழிவு நீர் தொட்டி அமைக்க தனி நபரிடம் ஒப்பந்தம் பெற்றுள்ளார். இதற்கு அனுமதி வழங்க துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டதை அடுத்து அது குறித்து சரவணன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். பின்னர் அதிகாரிகளின் திட்டப்படி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்த போது மறைந்திருந்த அதிகாரிகள் ராஜதுரையை கைது செய்தனர். 

 

Tags :

Share via