நிலத்தகராறில் 6 பேர் சுட்டுக்கொலை..

by Staff / 05-05-2023 04:13:51pm
நிலத்தகராறில் 6 பேர் சுட்டுக்கொலை..

மத்தியப்பிரதேசத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் இரு தரப்பினருக்கிடையே நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via