குழந்தையை பக்கெட் நீரில் மூழ்கடித்து கொன்ற அத்தை

by Staff / 08-06-2022 05:18:22pm
குழந்தையை பக்கெட் நீரில் மூழ்கடித்து கொன்ற அத்தை

அரக்கோணம் அடுத்த தோல் ஷாப் பகுதியை சேர்ந்தவர் மனோ. இவருக்கு அம்சா நந்தினி என்ற பெண்ணுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 5ம் தேதி நள்ளிரவு குழந்தை, தாய் அம்சா நந்தினி உள்ளிட்ட அனைவரும் ஒன்றாக உறங்கிய போது திடீரென குழந்தை காணமல் போனது., பல்வேறு இடங்களில் குழந்தையை உறவினர்கள் தேடிய நிலையில் வீட்டில் உள்ள கழிவறையில் இருந்த பக்கெட் நீரில்  குழந்தை இறந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டது. 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சந்தேகத்திற்கிடமாக நடந்துகொண்ட மனோவின் அத்தை தேன்மொழி மற்றும் அவரது மகள் பாரதி ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர் மனோவின் தந்தை இறந்த பின் அவருடைய வீட்டுமனை தனக்கு  கிடைக்காத விரக்தியில் இருந்ததாகவும், குழந்தையின் தந்தை மனோ தனது மகளை திருமணம் செய்யாமல் வேறு பெண்ணை மணந்ததால் தனக்கு சொத்து கிடைக்காத விரக்கதியால் திட்டமிட்டு குழந்தையை கொன்றதாக காவல் துறையினரிடம் தேன்மொழி வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். 

 

Tags :

Share via