முதியவருக்கு எய்ட்ஸ் இருப்பதாக தவறான ரத்தப் பரிசோதனை அறிக்கை தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார்

by Staff / 09-06-2022 12:01:46pm
முதியவருக்கு எய்ட்ஸ் இருப்பதாக தவறான ரத்தப் பரிசோதனை அறிக்கை தனியார்  மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார்

நெல்லையில் 72 வயதான முதியவர்க்கு எய்ட்ஸ்  இருப்பதாக தவறாக ரத்தப் பரிசோதனை அறிக்கை அளித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை ஒரு பகுதியை சேர்ந்த அக்பர் அலி என்பவர் கால் வீக்கம் காரணமாக ஜி எஸ் ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்ட போது எச்ஐவி தொற்று இருப்பதாக கூறி உள்ளது. இதனை அடுத்து அவர் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சென்று இரத்தப் பரிசோதனை செய்ததில் எச்ஐவி தொற்று இல்லை என்பது தெரியவந்தது.எனவே தவறான ரத்தப் பரிசோதனை செய்து அறிக்கை அளித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via