கல்லூரி மாணவிகள் சத்தான உணவுகளை உட்கொள்வதில்லை - அமைச்சர் கீதா ஜீவன் வேதனை

by Editor / 11-06-2022 05:44:11pm
கல்லூரி  மாணவிகள் சத்தான உணவுகளை உட்கொள்வதில்லை - அமைச்சர் கீதா ஜீவன் வேதனை

 

 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி கூட்டரங்கில் வைத்து பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளைக் பாது காப்பது குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக நலன், மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகையில். குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். பெண்கள் திருமண வயதை கடந்த பின்பு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும், கருவுற்ற பெண்கள் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும் அப்போதுதான் கருவுற்ற தாய்மார்களின் குழந்தை முழு வளர்ச்சி அடைந்து அறிவு சார்ந்த குழந்தைகளாக வளரும்.,தமிழகத்தில் 3 வயதிற்குட்பட்ட 10 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதனை சரி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார் கல்லூரி செல்லக்கூடிய மாணவிகள் உடல் எடை அதிகரிக்க கூடாது மாடனாக பேண்ட், டிசார்ட் போட வேண்டும் என்ற எண்ணத்தில் சத்தான உணவுகளை உட்கொள்வதில்லை..இதனால் அவர்களின் கர்ப்பபை வளர்ச்சி பாதிப்படைய கூடும் என்றார். இதில் நகர்மன்ற தலைவர் கருணாநிதி, துணை தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறு வயது குழந்தை திருமணம் கூடாது என்பதனை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கான விழிப்புணர்வினை அரசு ஏற்படுத்தி வருகிறது. நிறைய பேர் காதல் திருமணங்கள் செய்து கொள்வதால் அந்த எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது.சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் கிடைத்தும், குழந்தை திருமணத்தினை நிறுத்தி விடுகிறோம், பாலியல் வன்கொடுமை பிரச்சினையை தடுக்க முதல்வர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அமைச்சராக பதவி ஏற்றுதும் குழந்தை திருமணத்தினை தடுக்க வேண்டும், பாலியல் வன்கொடுமையை தடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி, இருக்கிற சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எ;ன்று முதல்வர் அறிவுறுத்தினாா்.. 1098, 1881 என்ற அழைப்புகளுக்கு புகார் வந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபடுகிறது.முன்பு வழக்கு பதிவு செய்யமாட்டார்கள், 2018 ல் இருந்து 2021 வரை 13 ஆயிரம் அழைப்புகள் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் கடந்த ஓராண்டில் 13 ஆயிரம் அழைப்புகளுக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம், பழைய காலத்தில் நடைபெற்ற குற்றங்களுக்கு கூட தற்பொழுது அழைப்புகள் வருகிறது. தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம், அது பற்றி தகவல்களையும் ஊடகத்திற்கு வழங்கி வருகிறோம், முதல்வர் நடவடிக்கையை தொடர்ந்து குழந்தை திருமணம் குறைந்து வருகிறோம். சென்னை, நெல்லையில் தொண்டு நிறுவனம் மூலமாக போதை தடுப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via