நாளை நடைபெற இருந்த தேர்தல் ஆலோசனைக்கூட்டம் ஒத்திவைப்பு.

by Editor / 07-01-2024 10:24:34am
நாளை நடைபெற இருந்த தேர்தல் ஆலோசனைக்கூட்டம் ஒத்திவைப்பு.

மக்களவைத் தேர்தல் தொடர்பாக சென்னையில் நடைபெற இருந்த தேர்தல் ஆணையர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியிலோ, மே மாத தொடக்கத்திலோ நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் வரும் 8ஆம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே நாளை நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

Tags : நாளை நடைபெற இருந்த தேர்தல் ஆலோசனைக்கூட்டம் ஒத்திவைப்பு.

Share via