சோனியா காந்தி ராகுல் காந்தி மீதானஅமலாக்கத்துறை விசாரணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

by Editor / 15-06-2022 12:53:02pm
சோனியா காந்தி  ராகுல் காந்தி மீதானஅமலாக்கத்துறை விசாரணை  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீதான பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி மீது அமலாக்கத்துறை இயக்குனரகத்தைப் பயன்படுத்தி, அரசியல் பழிவாங்கும் ஆளும் பாஜக அரசின் மூர்க்கத்தனமான செயலை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள மக்களின் அன்றாட அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாத பாஜக,  மக்களின் கோபத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இதுபோன்ற அரசியல் திசை திருப்பும் யுக்திகளை பயன்படுத்துவதாக முதலமைச்சர் சாடியுள்ளார்.அரசியல் தலைவர்களை அரசியல் களத்தில் எதிர்கொள்ள வேண்டுமே தவிர அமலாக்கத்துறையை ஏவி அல்ல என்றும் மத்திய பாஜக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

 

Tags :

Share via