உதவித்தொகை வழங்க பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கியதாக ஒப்புக்கொண்ட கிராம நிர்வாக உதவியாளர்

by Editor / 17-06-2022 11:40:53am
உதவித்தொகை வழங்க பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கியதாக ஒப்புக்கொண்ட கிராம நிர்வாக உதவியாளர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முதியோர் உதவித்தொகை வழங்க பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கியதாக ஒப்புக்கொண்ட கிராம நிர்வாக உதவியாளர் ஒப்புதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செய்யார் மாவட்டம் மளிகை பட்டு கிராமத்தில் முருகன் என்பவர் கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வருகின்றனர்.இவர் முதியோர்  மற்றும் விதவை உதவித்தொகை பெறும் பயனாளிகள் இடம் கட்டாயமாக லஞ்சப் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் முருகனிடம் லஞ்சம் வசூல் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

Tags :

Share via