மதிமுக எம்.பி. கணேச மூர்த்தி உயிரிழப்பு

by Staff / 28-03-2024 11:49:52am
மதிமுக எம்.பி. கணேச மூர்த்தி உயிரிழப்பு

ஈரோடு தொகுதி மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த மார்ச் 24 ஆம் தேதி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்து கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விஷ மருந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 72 மணி நேர சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கணேசமூர்த்தி உயிரிழந்தார். சிசிச்சையில் இருக்கும் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவை தேர்தலில் சீட் வழங்காததால் விரக்தியில் இருந்த கணேச மூர்த்தி விபரீத முடிவை எடுத்தார். இம்முறை மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது.

 

Tags :

Share via

More stories