மழை:வேளச்சேரி கல்கிநகர் பகுதியில் இரவில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி கல்கிநகர்,பகுதியில் இரவில் மழை நீர் தேங்கியதை அகற்றும் பானையில் மாநகராட்சியினர் ஈடுபட்டுள்ளதை பார்வையிட்டார்.அது குறித்து அவர் தனது டூவிட்டர் பக்கத்தில்,"மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருப்பவர்கள் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களே. சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை; தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் இப்பணியாளர்களின் இடைவிடாத பணியே. அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
Tags : இரவில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர்.