மின்சார ஸ்கூட்டர் விற்பனை நிலைய தங்கும் விடுதியில் தீ விபத்து - 7 பேர் பலி
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் நகரில் மின்சார வாகன விற்பனை நிலையம் உள்ளது. அங்குள்ள மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் பகுதியில் நேற்றிரவு தீ பிடித்தது. இந்த தீ அருகில் இருந்த 4 மாடிகள் கொண்ட தங்கும் விடுதிக்கும் பரவியது. அப்போது அங்கு 40 பேர் தங்கியிருந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த விடுதியில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.கடும் புகை மூட்டம் காரணமாக அந்த விடுதியின் முதல் 2 தளங்களில் தங்கியிருந்த 7 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். பலர் விடுதியில் இருந்து கீழே குதித்தனர். இதில் காயடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Tags :