கத்தியால் வெட்ட முயன்ற ரவுடியை பாய்ந்து பிடித்த அஞ்சாத சிங்கம்

by Editor / 18-06-2022 02:35:10pm
 கத்தியால் வெட்ட முயன்ற ரவுடியை பாய்ந்து பிடித்த அஞ்சாத சிங்கம்

போலீஸ் காவல் ஆய்வாளர் ஒருவரை வெட்டிக் கொலை செய்வதற்காக காத்திருந்தார் ரவுடி ஒருவன் 2 அடி நீள கத்தியால் அவரை வெட்ட முயலும்போது சினிமா பாணியில் சிங்கம் போல் பாய்ந்து பிடித்த காவல் ஆய்வாளர். ரவுடியை மடக்கிய பரபரப்பான சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா நூறுநாடு பகுதியில் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணி செய்து வருபவர் அருண்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை அருண்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது போலீசாரால் தேடப்பட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான என்பவன் சாலையோரம் இருப்பதைக் கண்ட காவல் ஆய்வாளர் அருண்குமார் தனது வாகனத்தை நிறுத்தி அதிரடியாக அவனை பிடிக்க முயன்றார். இதையடுத்து ஆவேசமான ரவுடி சுகுதன் தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளை துணியில் சுற்றி மறைத்து வைத்திருந்த இரண்டு அடி நீளத்தில் அருண்குமாரை வெட்ட முயன்றான். கண்ணிமைக்கும் நேரத்தில் ரவுடியின் கையை எட்டிப் பிடித்து மடக்கிய காவல் ஆய்வாளர் அருண்குமார் அவனுடன் மல்லுக்கட்டி அவன் கையில் இருந்த கத்தியை பறித்து காவலரிடம் கொடுத்தார் .அவரது கையில் காயம் ஏற்பட்டது கையில் லேசான வெட்டுக்காயம் அடைந்தாலும் அஞ்சாத சிங்கம் போல் அருண்குமார் செய்த வீர தீர செயல்களை கண்டு அங்கிருந்தவர்கள் வியப்படைந்தனர். சம்பவத்தை நேரில் பார்த்து சமூக ஆர்வலர் ஒருவர் ரவுடி சோதனை 4 முத்து மோதினார் கொலை செய்யும் திட்டத்துடன் தன்னை வெட்ட முயன்ற ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிக்க அதிகாரம் இருந்தும் வெறும் கையுடன் தைரியமாக பாய்ந்து பிடித்த காவல் ஆய்வாளர் கைது செய்த தரமான சம்பவம் பொதுமக்கள் பாராட்டுக்களும் நன்றிகளையும் தெரிவித்துஉள்ளனர்.

 

Tags :

Share via