அ.தி.மு.க விற்குள் நிலவும் அசாதாரண சூழல்
அ.தி.மு.கவிற்குள் வெடித்து கிளம்பியுள்ள ஒற்றைத்தலைமை பிரச்சனையால் இ.பி.எஸ்.-ஒ.பி.எஸ்.இடையே நிலவும் இறுக்கம் அதிகரித்துக்கொண்டேஇருக்கிறது.இரு அணிகளுக்குள்ளும். யார் ஜெயிப்பது என்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.இரு தரப்பு ஆதரவாளர்கள் மாறி..மாறி..சந்திப்பதும் ஆலோசனை செய்வதும் தூது வந்து பேசுபவர்ககளுமாக இரண்டு பேர் தரப்பிலும் உச்சக்கட்ட நகர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.கட்சியின் தலைமை ஒ.பி.எஸ்சும் ஆட்சிக்குத்தலைமை இ.பி.எஸ்சும் என்றிருந்த உடன்பாடுகள் தகர்க்கப்படுவதாகவும் கருத்துக்கள் பகிரப்படுகின்றன. கட்சியினர் குழப்பத்திலே யாரை ஆதரிப்பது
என்று புரியாமல் கூட்டம் எங்கே அதிகம் கூடுகிறதோ அந்தப்பக்கம் என்றும் சட்ட ரீதியாக அவர் வெற்றி பெற்று விட்டால்..என்கிற பயத்தோடும் குழம்பியநிலையில் பலர்.இரு தரப்பிலும் மூன்றாம்கட்டநிலை தலைவராக உள்ளோர்அங்குமிங்குமாக நடப்பதை கவனித்து தகவல் சொல்லி ..விசுவாசிகளை அனுப்பி வைத்து நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்..நாளை நீதிமன்றம் செல்வார்களா? ஆறு மணிக்குள் இரட்டைத்தலைமையிலேயே இயங்குவோம் என்று சொல்வார்களா?என்று கட்சித்தொண்டர்கள் காத்திருப்பதாக தகவல்.
Tags :