பூட்டிய வீட்டில் கொள்ளையடித்த 50 சவரன் தங்க நகைகள் மீட்பு

by Editor / 24-06-2022 12:56:16pm
பூட்டிய வீட்டில் கொள்ளையடித்த 50 சவரன் தங்க நகைகள் மீட்பு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பூட்டிய வீட்டில் கொள்ளையடித்த 50 சவரன் நகைகளை சிசிடி உதவியுடன் காவல்துறையினர் மீட்டனர். ராஜரத்தினம் நகரில் மரியதாஸ் என்பவரின் வீட்டில் கடந்த திங்களன்று நடந்த திருட்டு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார். உடன் குடியைச் சேர்ந்த செல்வராஜ் சங்கர் மற்றும் இடைச்சிவிளை சேர்ந்த மைக்கேல் ராஜ் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் இரும்பு தகரம் பிளாஸ்டிக் போன்றவற்றை விலைக்கு வாங்குவதாக கூறி நோட்டமிட்டு பூட்டிய வீட்டில் கொள்ளை அடிப்பது தொழிலாக கொண்டது தெரியவந்தது.

 

Tags :

Share via