கொரோனோவால் நிறுத்தப்பட்ட ரயில்கள் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்களாக இயக்கம்

by Editor / 26-06-2022 12:45:53pm
கொரோனோவால் நிறுத்தப்பட்ட ரயில்கள் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்களாக இயக்கம்

ஜூலை 1ஆம் தேதி முதல் தென்மாவட்டங்களில் சிறப்பு பெற்ற பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த சாதாரண ரயில்கள் கொரோனா தொற்றுகாரணமாக  நிறுத்தப்பட்ட நிலையில்  கொரோனா தொற்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் படிப்படியாக இயக்கத்தை தொடங்கியுள்ளன.இதன் தொடர்ச்சியாக முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்களாக இயக்கம் தொடங்கியுள்ளது.அதன்படி சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

திருச்செந்தூர் - திருநெல்வேலி முன்பதிவில்லாத சிறப்பு ரயிலானது (06405) திருச்செந்தூரிலிருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12.00 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

 மறுமார்க்கத்தில் திருநெல்வேலி - திருச்செந்தூர் முன்பதிவில்லாத சிறப்பு ரயிலானது (06409) திருநெல்வேலியில் இருந்து மாலை 04.05 மணிக்கு புறப்பட்டு, மாலை 05.45 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும்.

 இந்த ரயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சினாவிளை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

 

மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (06663) மதுரையிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மாலை 03.20 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06664) காலை 11.50 மணிக்கு புறப்பட்டு மாலை 03.35 மணிக்கு மதுரை வந்து சேரும். 

இந்த ரயில்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

 திருநெல்வேலி - செங்கோட்டை - திருநெல்வேலி இடையே இரண்டு ஜோடி சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.

 அதன்படி திருநெல்வேலி - செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06681) திருநெல்வேலியிலிருந்து காலை 09.10 மணிக்கு புறப்பட்டு, காலை 11.25 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06658) செங்கோட்டையிலிருந்து மதியம் 02.55 மணிக்கு புறப்பட்டு மாலை 05.20 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். 

இந்த ரயில்கள் திருநெல்வேலி டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காரைக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவண சமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கொரோனோவால் நிறுத்தப்பட்ட ரயில்கள் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்களாக இயக்கம்
 

Tags : Trains stopped by Corono operate as unmarked special express trains

Share via