பூமிக்கடியில் இருந்து பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம் தந்தை மகன் கைது
கள்ளகுறிச்சி மாவட்டம் புதூரில் தலையில் பலத்த காயங்களுடன் பூமிக்கடியில் இருந்து பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த தந்தை மகனை போலீசார் கைது செய்தனர். பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சிசிடி மற்றும் செல்போன் சிக்னலை ஆராய்ந்து 3 தனிப்படை போலீசார் வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் அவரது மகன் விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் உயிரிழந்தது அதே ஊரைச் சேர்ந்த ஆண்டாள் என்றும் மகளை வெளி நாட்டுக்கு அனுப்ப 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி தராத ஆத்திரத்தில் 10 நாட்களுக்கும் மேலாக வீட்டில் வைத்து அடித்து துன்புறுத்தி கொலை செய்ததாக இருவரும் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
Tags :